உமறுப்புலவர் அரங்கம்

2017-TLF---Umar-Pulavar-Arangam

22 April 2017
மதியம் 2 - 5


சிங்கப்பூர் கடையநல்லூர் முஸ்லிம் லீக் நடத்தும் இந்த நிகழ்ச்சி, இந்தாண்டோடு ஐந்தாவது முறையாக நடத்தப்படுகின்றது. இந்திய முஸ்லிம் சமூகத்தினரின் தமிழ்த்தொண்டினை இந்த நிகழ்ச்சி எடுத்துக் கூறுகின்றது.

சென்ற ஆண்டுகளைப் போலவே, இந்த ஆண்டும் தமிழ்மொழியை இளைய தலைமுறையினர் மத்தியில் பேசவும் வாழ்க்கையோடு பின்னிப்பிணைந்த மொழியாகக் கொண்டு விளங்கவும் முயற்சிகள் எடுக்கப்படும். மேலும் இது சாத்தியமாவதற்குப் பெற்றோர்களின் பங்கு பற்றி அவர்களுடன் சில உத்திமுறைகள் பகிர்ந்துகொள்ளப்படும்.

நிகழ்ச்சியின் ஓர் அங்கமாக, தமிழ்மொழியின் சிறப்புப் பற்றிய ஓர் இலக்கியச் சொற்பொழிவு நடைபெறும். 
மூன்று மணி நேரம் நடைபெறும் இந்த நிகழ்ச்சியின் இறுதியில், முத்தாய்ப்பாக, மூன்று அல்லது நான்கு தனிநபர்களுக்கு விருதுகள் வழங்கப்படும். தனிநபராகவோ அல்லது அவர்கள் சார்ந்துள்ள சமூக அமைப்புகளின் வழியாகத் தமிழுக்கு ஆற்றிய சேவைக்காகக் கௌரவிக்கப்படுவார்கள்.

 
Back To Top