37வது தமிழர் திருநாள் விழா 2017

2017-TLF---Tamilar-Thirunal-Festival

09 April 2017
மாலை 6 - இரவு 9


சிங்கப்பூரின் எதிர்கால நம்பிக்கை நட்சத்திரங்களாகிய நம் மாணவர்கள் தமிழில் பேசவும் தமிழர்க் கலைகளில் சிறந்து விளங்கவும் இந்நிகழ்ச்சி தளம் அமைத்துக்கொடுக்கின்றது. மாணவர்களைத் தவிர்த்து, பல்வேறு சிங்கப்பூர்க் கலைஞர்கள் தத்தம் திறமைகளை முன்னிறுத்தி, நிகழ்ச்சியை வழிநடத்துவர். பல்லினச் சமூகத்தின் பிரதிபலிப்பாகிய சிங்கப்பூரின் தனித்தன்மையை வெளிக்கொணரும் வகையில், பல்லினக் கலைப்படைப்புகளும் இடம்பெறும்.

தமிழ்த்தேனைப் பருகவரும் தமிழ் நெஞ்சங்களுக்கென, ஏற்பாட்டாளர்கள் மலேசியாவின் சிறந்த பேச்சாளரும் வழக்குரைஞருமாகிய திரு.பாண்டிதுரையின் இலக்கியப்பேச்சுக்கு ஏற்பாடு செய்துள்ளனர். 

Back To Top