சொற்சிலம்பம் 2017

2017-TLF---Sorsilambam

22 April 2017
மாலை 6.30 - இரவு 8.30


மக்கள் கழக நற்பணிப் பேரவை, வட மேற்கு வட்டார இந்தியர் நற்பணிச் செயற்குழுக்கள் இணைந்து சொற்சிலம்பம் 2017 எனும் விவாதப்போட்டியை நடத்த இருக்கின்றனர். இந்த விவாதப்போட்டி தொடக்ககல்லூரிகள்/மில்லினியா கல்வி நிலையம், பலதுறைத் தொழில்நுட்பக் கல்லூரிகள் மற்றும் IB பாடத்திட்டத்தை நடத்தும் பள்ளிகள் ஆகியவற்றுக்காக நடத்தப்படுகின்றது.

ஏழாவது ஆண்டாக நடத்தப்படும் இந்த விவாதப்போட்டி, கல்வி அமைச்சு, தகவல்சாதன மேம்பாட்டு ஆணையம், மீடியகார்ஃப் வசந்தம் மற்றும் வளர்தமிழ் இயக்கம் ஆகிய அமைப்புகளின் ஆதரவில் நடைபெறுகின்றது. 

இந்த விவாதப்போட்டியின் மூலம் மாணவர்களின் ஆய்வு செய்யும் திறன், விவாதிக்கும் உத்திமுறைகள் மற்றும் கருத்துகளை முன்வைக்கும் தன்மைகள் ஆகியவை மேம்படும். மேலும், மாணவர்கள் தமிழில் மென்மேலும் சிறப்பாகப் பேசவும் எழுதவும் வழிவகுக்கும். 

 
Back To Top