கவிமணம்

2017-TLF---Kavimanam

07 April 2017
மாலை 7 - இரவு 9


ஆண்டுதோறும் நடைபெறும் பிரசித்திப்பெற்ற தமிழ்மொழி விழாவில் அனைத்து நிலை கவிஞர்களும் பங்கெடுத்து, வெற்றிபெறத் தளம் அமைக்கும் விதமாக இந்த நிகழ்ச்சி அமைக்கப்பெற்றுள்ளது.

ஒரு கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு, கவிஞர்கள் அக்கருப்பொருளை ஒட்டிய தங்கள் பார்வையைக் கவிதையாக வடிப்பர். 

கவிதைகளில் இழையோடும் சொற்கள், சொற்களுக்கு மெருகூட்டும் உருவகங்கள், எதுகை மோனைச் சொல்விளையாட்டு ஆகியவையும் கற்பனைவளம் நிரம்பும் காட்சியமைப்பும் உணர்ச்சி வெளிப்பாடும் நிச்சயம் கவிஞர்களை மட்டுமின்றி, வருகை புரியும் தமிழ் ஆர்வலர்களையும் தமிழில் திளைக்க வைக்கும் என்பது நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் திடமான எண்ணமாகும். மேலும், இந்த நிகழ்ச்சி தமிழ்மொழியின் வளத்திற்கு இன்னும் பலம் சேர்க்கும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Back To Top