இணையத்தில் சிங்கைத் தமிழ் நூல்கள் - ஓர் ஆய்வு

2016-TLF-Digitized-Singapore-Tamil-Literature

16 April 2016
மாலை 6.00 முதல் 9 வரையில்


 இணையத்தில் சிங்கைத் தமிழ் நூல்கள்  - ஓர் ஆய்வு 

கட்டணம் & முன்பதிவு : கட்டணமும் முன்பதிவும் தேவையில்லை 

தொடர்புக்கு : திரு.கருணாநிதி - aaasgsecretary@gmail.com

நிகழ்ச்சி விளக்கம் :
இந்த நிகழ்ச்சி ஒரு சில நிகழ்வுகளைக் கொண்ட கதம்பமாக மணம் வீச இருக்கிறது. 

முதலாவதாக, சிங்கப்பூரில் கடந்த  ஐம்பது ஆண்டுகளில் வெளியீடு கண்ட தமிழ் நூல்களின் மின்னியலாக்கத்தின் அடிப்படையில், அப்பட்டியலிலிருந்து ஒரு நூலை மாணவர்கள் ஆய்வு செய்வர். சிறந்த படைப்புகளுக்குப் பரிசு அளிக்கப்படும். இரண்டாவது நிகழ்வாக, சிறப்புப் பேச்சாளராக வரவிருக்கின்ற எழுத்தாளரும் ஊடகவியலாளருமான திரு.மாலன் சிறப்புரை நிகழ்த்துவார். இறுதியாக, முனைவர் கோட்டி திருமுகானந்தம் எழுதிய 'சி.கு.மகுதும் சாயுபுவும் சிங்கை நேசனும் - ஓர் ஆய்வு' என்ற நூல் வெளியீடு காண உள்ளது.
Back To Top