19 April 2025
மதியம் 2 & இரவு 7 (இரண்டு நிகழ்ச்சிகள்)
இந்தியப் புராணங்களிலும் தமிழ் இலக்கியங்களிலும் வாகை சூடிய மாவீரன் கர்ணனின் கதைக்கப்படாத இளமைக் காவியம் உயிர்பெற்றுவரும் நாட்டிய நாடகம். பரவசமூட்டும் அசைவுகளும் கதைசொல்லும் உத்திமுறைகளும் கர்ணனின் இலக்கை நாடிய பயணத்தைப் புதிய பரிணாமத்தில் எடுத்தியம்புகிறது. காதல், குடும்பம், கல்வி, நட்பு அடங்கிய அந்தப் பயணம் கர்ணனின் உணர்வுகள், இடர்கள், சாதனைகள் ஆகியவற்றை இப்படைப்பு பறைசாற்றுகின்றது.