உமறுப்புலவர் அரங்கம்

21 April 2018
மதியம் 3 - 5


இவ்வாண்டு நடைபெறவுள்ள ‘உமறுப்புலவர் அரஙகம்’ எனும் நிகழ்ச்சி, சிங்கப்பூர் கடையநல்லூர் முஸ்லிம் லீக் நடத்தும் ஆறாவது தமிழ்மொழி விழாவிற்கான நிகழ்ச்சியாகும்.

கடந்த ஆண்டுகளைப் போலவே, இளைய தலைமுறையினர் தமிழில் பேசுவதற்கும், சிங்கப்பூரில் தமிழ் வாழும் மொழியாக நீடித்திருக்க பெற்றோரின் முக்கிய பங்கினை வலுப்படுத்தவும் சிங்கப்பூர் கடையநல்லூர் முஸ்லிம் லீக் பல்வேறு முறைகளை இந்நிகழ்ச்சி வழி ஆராய்கிறது.

இந்த 3-மணி நேர நிகழ்ச்சியில் தமிழ் மொழியைச் சிங்கப்பூரில் செழிக்கப் பங்களிப்புச் செய்த 3 அல்லது 4 தனிநபர்கள் அடையாளம் காணப்படுவார்கள். இது கடந்த காலத்தில் வெளிச்சம் பெறாத நாயகர்களை அங்கீகரிப்பதற்கும், அத்தகையவர்களைத் தொடர்ந்து அடையாளம் காண்பதற்கும் உதவுகிறது.

Back To Top