நாளை நமதே

2022-TLF---Thamizhavel-Narppani-Mandram---Nalai-Namathae

03 April 2022
காலை 10 - நண்பகல் 12


சிங்கப்பூரின் 4 அதிகாரத்துவ மொழிகளில் 4 பேச்சாளர்கள் வழிநடத்திச் செல்லும் கருத்தாடல் நிகழ்ச்சி இது. மேண்டரின், தமிழ், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் பேசும் தமிழ்ப் பேச்சாளர் நிகழ்ச்சியின் சிறப்பம்சமாகத் திகழ்வார். கருத்தாடலில் பங்குபெறும் 4 பேச்சாளர்களும் (கருத்தரங்கச் சூழலில்) தமிழ் மொழியின் எதிர்காலம், மொழியின் தேவைகளை சமூகத்திடம் எப்படி கொண்டு செல்வது, இளையர்கள் அனைத்துலக அரங்கில் தனித்துவம் அடைய திறன்களை எவ்வாறு வளர்த்துக் கொண்டு சமூகத்திற்கும் பங்களிப்பது என்பன பற்றி பேசுவார்கள்.

இரு மொழித் திறன் பற்றியும் அலசி ஆராயப்படும். மாறிவரும் கலாசாரப் பின்னணியில் வாழும் மொழியாகத் தமிழ் மொழி நீடித்து நிலைப்பதற்கான சவால்கள் பற்றி இளையர்கள் கேள்விகள் கேட்கக்கூடிய இருவழித்தொடர்பு அங்கமாகக் கருத்தாடல் நடைபெறும்.
Back To Top