யுத்த காண்டம்

2022-TLF---NTU-TLS-AA---Yutha-Gaandam

24 April 2022
காலை 10 - மதியம் 1


இணையவழி தமிழ் புதிர்ப் போட்டி, 18 வயதுக்கு மேற்பட்ட தமிழ் பேசும் சிங்கப்பூரர்களுக்கும் நிரந்தரவாசிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தப் புதிர்ப் போட்டியில் பங்கேற்பாளர்கள் தங்களுடைய இணையுடன் கலந்து கொள்ளலாம். போட்டியில் கேட்கப்படும் கேள்விகள் அனைத்தும் தமிழ் மொழியையும் இலக்கியத்தையும் சார்ந்தவையாக இருக்கும். இப்போட்டியில் கலந்துகொள்ளும் குழுக்களில் எந்தக் குழு குறுகிய நேரத்தில் அனைத்துக் கேள்விகளுக்கும் சரியான பதிலளிக்கிறார்களோ அவர்களே வெற்றியாளர்கள் ஆவர்.

மேலும், இந்தப் புதிர்ப் போட்டியில், பங்கேற்பாளர்கள் தமிழ் மொழியின் பரிணாம வளர்ச்சி குறித்த விழிப்புணர்வையும் வளர்த்துக்கொள்வார்கள். அதுமட்டுமல்லாமல், தமிழ் மொழியுடனான அவர்களின் உறவை வலுப்படுத்திக்கொள்வார்கள். மேலும், இப்போட்டியின் மூலம், பங்கேற்பாளர்கள் தங்களுடைய குடும்பத்தினருடன் பகிர்ந்து கொள்ள இது ஒரு நல்ல வாய்ப்பாக உள்ளது. அதோடு, தமிழ் மொழியின் வளமான வரலாற்றையும் ஆற்றலையும் மீண்டும் எடுத்துரைப்பதன் மூலம் பங்கேற்பாளர்கள் மொழியைப் போற்றிப் பாராட்டுவதற்கு உதவுவதை இப்போட்டி நோக்கமாகக் கொண்டுள்ளது.
Back To Top